மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
தமிழில் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதை போன்று ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு டாஸ்கில், கழுதையை பராமரிக்க வேண்டும் என்று கூறியவர்கள், ஒரு கழுதையை பிக்பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டி போட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்த பிரோமோ வெளியிடப்பட்டதை அடுத்து சல்மான்கான் மற்றும் ஹிந்தி பிக்பாஸ் தயாரிப்பாளர்களுக்கு பீட்டா அமைப்பு கடிதம் எழுதியிருக்கிறது.
அதில், விலங்குகளை பொழுது போக்குவதற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இது அவற்றுக்கு மனஅழுத்தம் அளிப்பது மட்டுமின்றி அதை பார்ப்பவர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தும். அதனால் அந்த கழுதையை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்று பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனபோதும் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், பீட்டா அமைப்பின் இந்த கடிதத்திற்கு இன்னும் பதில் கொடுக்கவில்லை.