சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா, ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டார். அதையடுத்து அவரது 100 கோடி சொத்துகள் முடக்கப்பட்டன. அதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் அவர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்த நிலையில், அந்த வழக்கில் ஷில்பா ஷெட்டியின் கணவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.
இப்படியான நிலையில் தொடர்ந்து ஊடகங்களில் ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா மீது அவதூறு செய்திகள் வெளியிட்டு வருவதால் தற்போது ஊடகங்கள் மீது 356வது பிரிவின் கீழ் மானநஷ்ட ஈடு வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதில் எங்களது புகைப்படத்தை வெளியிட்டு ஊடகங்கள் தொடர்ந்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றன. தற்போது வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. குற்றவாளி என்று நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கவில்லை. அதனால் எங்களை தவறான கோணத்தில் சித்தரித்து செய்தி வெளியிட்டு வரும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மும்பை நீதிமன்றத்தில் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து உள்ளார்.