திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதி அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். இவர்களுக்கு 13 வயது ஆரத்யா பச்சன் என்கிற பெண் குழந்தை இருக்கிறது. சமீப வருடங்களாகவே ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் இடையே கருத்து வேறுபாடு என்றும் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரியப் போகிறார்கள் என்றும் அவ்வபோது செய்திகள் அடிபடுவதும் பிறகு இருவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒன்றாக கலந்து கொண்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும் தொடர்கதையாக இருக்கிறது.
இந்த நிலையில், 'பிலிம்பேர் ஓடிடி விருதுகள்-2024' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிஷேக் பச்சன், திருமணமான ஆண்களுக்கு ஒரு அறிவுரையையும் வழங்கினார். அந்நிகழ்ச்சியில் தொகுப்பாளர், ''படங்களில் நடிக்கும்போது இயக்குனரின் பேச்சைக் கேட்பது போல் வீட்டில் மனைவியின் பேச்சையும் கேட்பீர்களா?'' என வேடிக்கையாக கேட்டார்.
இதற்கு அபிஷேக்கும் வேடிக்கையான முறையில் பதிலளித்தார். "ஆம், திருமணமான எல்லா ஆண்களும் இதையே செய்ய வேண்டும். உங்க மனைவி சொல்றதைக் கேளுங்க" என்றார். விவாகரத்து பற்றிய வதந்திகள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கும் சூழலில் அபிஷேக் பச்சனின் இந்த பேச்சு வைரலாகியுள்ளது.