ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக கிட்டத்தட்ட 360 படங்களில் நடித்து விட்டவர் நடிகர் மோகன்லால். தற்போது அங்கே நம்பர் ஒன் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் மோகன்லால், தனக்குள் நீண்ட நாட்களாகவே இருந்த டைரக்சன் ஆசைக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிர் கொடுக்கும் விதமாக பரோஸ் என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார்.
வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு வந்து சென்றதன் பின்னணியில் உள்ள சில மர்மங்களை மையப்படுத்தி வரலாற்று பின்னணியில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அவரும் ஒரு மைய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மை டியர் குட்டிச்சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஎப்எக்ஸ் பணிகள் காரணமாக இதன் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் தள்ளி தள்ளிப் போனது. இந்த நிலையில் வரும் டிசம்பர் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என உறுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. படமும் திரையிடுவதற்கு ஏற்ப தயாராகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை துவங்கியுள்ள மோகன்லால் நேற்று மும்பையில் இதன் டிரைலர் வெளியீட்டு விழாவை நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் மோகன்லாலின் மிக தீவிரமான ரசிகன் நான் என்றும் சிலாகித்துக் கூறினார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் கண்ணப்பா திரைப்படத்திலும் மோகன்லால், அக்ஷய் குமார் இருவருமே இணைந்து நடிக்கிறார்கள் என்பதும் இந்த விழாவில் அக்ஷய் குமார் கலந்து கொள்ள ஒரு காரணம்.