ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யாவின் ‛பின்டு கி பாப்பி' படத்தின் டிரைலரை, நடிகர் அக்ஷய் குமார் வெளியிட்டார். காதல், நகைச்சுவை, பொழுபோக்கு கலந்த ஆக்ஷன் படமாக உருவாகி உள்ளது.
சுஷாந்த், ஜன்யா ஜோஷி, விதி ஆகியோர் ஹீரோ, ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள். கணேஷ் ஆச்சார்யா, விஜய் ராஜ், முரளி சர்மா, சுனில் பால், அலி அஸ்கர், பூஜா பானர்ஜி ஆகியோரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை விதி ஆச்சார்யா தயாரித்துள்ளார் மற்றும் ஷிவ் ஹரே எழுதி இயக்கியுள்ளார்.
டிரைலரை வெளியிட்டு அக்ஷய் குமார் கூறுகையில், "இந்தப் படத்துக்காகவும் எனது நண்பர் கணேஷ் ஆச்சார்யாவுக்காகவும் இங்கு வந்துள்ளோம். நாங்கள் கிட்டத்தட்ட 30 வருடங்களாக நண்பர்கள். என்னுடைய 'டாய்லெட் ஏக் கதா' படத்துக்காக அவர் 7-8 பாடல்களுக்கு நடனம் அமைத்திருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்'' என்றார்.
கணேஷ் ஆச்சார்யா கூறுகையில், "இந்தப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என் மனைவி விதியை சம்மதிக்க வைத்து, தயாரித்தேன். சுவாமி படத்திலிருந்து இப்போது வரை படங்களை தயாரிக்க முயற்சித்து வருகிறேன். நான் எப்போதும் கஷ்டப்படுகிறேன் ஆனால் கடவுள் எனக்கு உதவுகிறார். என் மனைவி தான் எனது பலம். நான் எப்போதும் புதிய நபர்களுடன் வேலை செய்ய விரும்புகிறேன்'' என்றார்.
இந்தபடம் 2025, பிப்., 21ல் ரிலீஸாகிறது.