2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
பாலிவுட் நடிகர் அமீர்கான், தான் நடித்து வரும் படங்ளில் தனது கதாபாத்திரத்திற்காக உடல் எடையை ஏற்றுவது, இறக்குவது, கெட்டப் மாற்றுவது என அர்ப்பணிப்பு உணர்வுடன் நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர். அதற்காகவே அவரை மிஸ்டர் பர்பெக்ஷனிஸ்ட் என்று கூட குறிப்பிடுவார்கள். அந்த வகையில் ஹிந்தியில் தனது படத்தில் நடிப்பதற்காக தொடர்ந்து பத்து நாட்களுக்கு மேல் குளிக்காமல் படப்பிடிப்பில் அமீர்கான் கலந்து கொண்டார் என்று ஒரு செய்தி சொல்லப்பட்டு வந்தது. இது உண்மை தான் சமீபத்திய பேட்டியில் அமீர்கான் ஒப்புக்கொண்டார்.
அதாவது 1989ல் ராக் என்கிற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்தார். அந்த படத்தில் அவர் வீட்டை விட்டு வெளியேறி நாடோடியாக தெருவில் சுற்றும் மனிதனாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரத்திற்கு அழுக்கடைந்த தோற்றத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 12 நாட்கள் குளிக்காமலேயே படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
அது மட்டுமல்ல மீண்டும் ஒருமுறை அதாவது 1998ல் குலாம் என்கிற படத்தில் நடித்தபோது கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒரு வாரத்திற்கு மேல் படமாக்கப்பட்டது. அந்த சண்டைக் காட்சியில் மோதும்போது அடிபட்ட தழும்புகள், காயங்கள் இவை எல்லாம் குளித்தால் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல குளித்துவிட்டு மறுநாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் ஒரு பிரஸ் லுக் மீண்டும் வந்துவிடும். இதனை தவிர்ப்பதற்காக அந்த சண்டைக்காட்சிகளை படமாக்கிய நாட்களில் கிட்டத்தட்ட ஒரு வாரம் குளிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார் அமீர்கான்.