வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்து வரும் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன. இதனால் எந்த மாதிரியான கதைகளில் நடிப்பது, எந்த மாதிரியான கேரக்டர்களில் நடிப்பது என்று அவருக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் நடித்துள்ள 'ஹவுஸ்புல் 5' வெளிவந்துள்ளது. இதனால் படம் குறித்து ரசிகர்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக படம் வெளியான தியேட்டர்களுக்கு சென்று முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு மைக்கை பிடித்து படம் பார்த்து திரும்பும் ரசிகர்களிடம் ஒரு யு-டியூபரை போல படத்தை பற்றிய அபிப்ராயத்தை கேட்டுள்ளார்.
இதில் அக்ஷய் குமார் நல்ல நடிகர் ஆனால் கதை தேர்வில் ரொம்ப வீக், ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்கிறார், ஆக்ஷன் படங்களை தவிர்த்து அழுத்தமான கதையம்சமுள்ள படங்களில் அவர் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்திருக்கிறது.