வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இன்று வெளியான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. கடந்த 2007ல் அமீர்கான் நடித்து இயக்கி வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஆர் எஸ் பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான், சித்தாரே ஜமீன் பர் படக்குழுவினரை அவர்களது செட்டுக்கு நேரில் வந்து சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இவர்கள் மூவருமே எந்தவித பந்தாவும் ஈகோவும் இன்றி ஒருவரது படத்தை மற்றொருவர் பாராட்டுவதுடன் அவர்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதை ஷாருக்கான் இப்போதும் நிரூபித்துள்ளார்.