தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பாலிவுட்டில் ஏற்கனவே இரண்டு பாகங்களாக அடுத்தடுத்து வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‛ஹேரா பெரி'. மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் 2001ல் முதல் பாகமும், நீரஜ் ஓரா இயக்கத்தில் 2006ல் இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றன. இந்த இரண்டு பாகங்களிலும் நடிகர்கள் அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இதன் மூன்றாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை இயக்குனர் பிரியதர்ஷன் தான் இயக்குவதாக சொல்லப்படுகிறது. அக்ஷய் குமாரே தயாரிக்கிறார்.
இன்னும் படப்பிடிப்பு துவங்காத நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து தான் விலகி உள்ளதாக நடிகர் பரேஷ் ராவல் அறிவித்தார். இதனை தொடர்ந்து அவர் மீது 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார் தயாரிப்பாளரான அக்ஷய் குமார். பதிலுக்கு தனது வழக்கறிஞர் மூலமாக தயாரிப்பாளரான அக்ஷய் குமாருக்கு இது குறித்து விளக்கம் அளித்து பதில் நோட்டீஸ் அனுப்பினார். அதன்பிறகு அது பற்றிய பரபரப்பு அமுங்கிய நிலையில் தற்போது இவர்களுக்குள் சமாதானம் ஏற்பட்டு நடிகர் பரேஷ் ராவல் இந்த படத்தில் நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் அவர் அளித்த ஒரு பேட்டியிலும் கூட, “நான் சினிமாவில் அரசியலை ஒருபோதும் விரும்பாதவன். தென்னிந்தியாவில் தான் வசிக்கிறேன். கூப்பிடும் போது சென்று நடித்துவிட்டு வருவேன். என்னைப் பற்றி சிறிய சர்ச்சை கூட சினிமாவில் இருக்காது. அக்ஷய் குமார், சுனில் ஷெட்டி எல்லோர் மீதும் எனக்கு மிகப்பெரிய மதிப்பு உண்டு” என்று கூறியுள்ளார்.
இப்படி பரேஷ் ராவல் திடீரென படத்தை விட்டு விலகியதும் பின்னர் தற்போது படத்தில் இணைந்துள்ளது குறித்தும் இயக்குனர் பிரியதர்ஷன் கூறும்போது, “அக்ஷய் குமார், பரேஷ் ராவல் சுனில் ஷெட்டி மூவருமே தாங்கள் ஒன்றாக இணைந்து விவாதித்ததாகவும், அதன்பிறகு இந்த படத்தில் ஒன்றாக நடிக்க விரும்புவதாகவும் என்னிடம் தெரிவித்தார்கள். இவர்களது இந்த முடிவில் வேறு யாருக்கும் எந்த பங்கும் இல்லை. இந்த மூன்று பேருமே அவர்களாகவே ஒன்று சேர்ந்து பேசி தான் இந்த முடிவை எடுத்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.




