சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
மலையாள நடிகர் சங்கத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 30 வருட காலகட்டத்தில் இப்போதுதான் முறையாக தலைவர் பதவிக்கு ஒரு பெண் அதாவது நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஆணாதிக்கம் கொண்ட பலர் அவர் போட்டியிடுவதை தடுக்க முயற்சித்தனர். அது முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குலைக்கும் விதமாக எப்போதோ சில மாதங்களுக்கு முன் ச்வ்வ்தா மேனன் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக இப்போது அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு நபர் மூலமாக புகார் அளித்ததாகவும் அதன் காரணமாக ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் இதே கருத்தை முன்வைத்து, விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்வேதா மேனன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி அருண் இந்த வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
“இந்த புகாரானது மிகவும் குறுகிய காலத்தில் பதியப்பட்டு விரைவாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. முறைப்படியான போலீஸ் விசாரணை எதுவும் இன்றி அவசர கதியில் இந்த எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது அதனால் ஸ்வேதா மேனன் மீதான விசாரணையை தற்சமயம் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடுவதாக நீதிபதி கூறியுள்ளார் அந்த வகையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஸ்வேதா மேனனுக்கு வெற்றிக்கு குறுக்கே விழுந்த மிகப்பெரிய தடையும் நீங்கி விட்டது.. கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.