தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சில மாதங்களுக்கு முன்பு கன்னட நடிகை ரன்யா ராவ் என்பவர் தொடர்ந்து துபாயில் இருந்து பெங்களூருக்கு விமானம் மூலமாக அடிக்கடி தங்கம் கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த வாகா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அது மட்டுமல்ல கர்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் என்பவரின் வளர்ப்பு மகளும் கூட. அந்த துணிச்சலில் தான் இவர் இந்த தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிய வந்தது.. பலமுறை ஜாமினுக்கு விண்ணப்பித்தும் அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் ரன்யா ராவ்.
இந்த நிலையில் வருவாய் புலனாய்வு இயக்குனரகம், நடிகை ரன்யா ராவ் தொடர்ந்து துபாயில் இருந்து சுமார் 127.3 கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் என்று குறிப்பிட்டு அதற்காக அவருக்கு 102.55 கோடி அபராத தொகையாக விதித்துள்ளது. அபராத தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் கட்ட தவறினால் ரன்யா ராவுக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த தங்க கடத்தலில் ரன்யா ராவின் கூட்டாளிகளாக இணைந்து செயல்பட்ட குண்டூர் ராஜுவுக்கு 67.6 கிலோ தங்கம் கடத்தியதற்காக 62 கோடி அபராத தொகையும் சஹில் ஜெயின் என்பவருக்கு 63.61 கிலோ தங்கம் கடத்தியதற்காக 53 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.




