பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார் | ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ் | ரூ.60 கோடி மோசடி வழக்கு : நடிகை ஷில்பா ஷெட்டிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் | லப்பர் பந்துக்கு பிறகு 100 கதைகள் கேட்டும் திருப்தியில்லை : தினேஷ் | பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு | ஜிஎஸ்டி வரி குறைப்பு : சினிமா தியேட்டர்களுக்கு பயன்படுமா? | 'மதராஸி' படத்தில் 'துப்பாக்கி' டயலாக் : விஜய் மீதான விமர்சனமா ? | அனுஷ்காவுக்குக் கை கொடுத்த பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா | ‛எப் 1' ரீ-மேக்கிற்கு அஜித் தான் பொருத்தமானவர் : நரேன் கார்த்திகேயன் | மீண்டும் தெலுங்கு படக்குழு உடன் இணையும் தனுஷ் |
கடந்த 2016ம் ஆண்டில் பாஸ்டியன் என்ற உணவகத்தை மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் திறந்தார் நடிகை ஷில்பா ஷெட்டி. அதன் பிறகு அதே பாந்த்ராவில் ஒரு பெரிய இடத்துக்கு அது மாற்றப்பட்டு உணவு பிரியர்கள் மற்றும் பிரபலங்களுக்கான ஒரு இடமாக மாறியது.
இந்த நிலையில் தனது இணையப் பக்கத்தில் ஷில்பா ஷெட்டி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், தனது மும்பை உணவகமான பாஸ்டியன் செப்டம்பர் 4ம் தேதியான நாளை மூடப்படுவதாக தெரிவித்திருக்கிறார். தனது நட்பு வட்டாரத்துக்கு இன்று அவர் ஒரு இரவு விருந்தும் கொடுக்கிறார். என்றாலும் எதற்காக அந்த ஓட்டல் மூடப்படுகிறது என்பது குறித்து அவர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.
மேலும் தற்போது ஷில்பா ஷெட்டியும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் 60 கோடி ரூபாய் கடன் மற்றும் முதலீடு முறைகேட்டில் சிக்கி இருக்கிறார்கள். இதுபோன்ற பிரச்னைக்காக கூட அவர்கள் அந்த ஹோட்டலை விற்பனை செய்யலாம் என்கிற கருத்துக்களும் வெளியாகி உள்ளன.