தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஆகிய இருவரும் கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த தீபிகா படுகோனே, கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் எட்டாம் தேதி ஒரு மகளைப் பெற்றெடுத்தார். அந்த மகளுக்கு துவா என்று பெயர் வைத்தார்கள். இப்போது வரை தங்களது மகளின் முகத்தை அவர்கள் ரசிகர்களுக்கு காட்டவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கள் மகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை அவர்கள் கொண்டாடி உள்ளார்கள். மகளின் இந்த பிறந்த நாளுக்காக தானே கேக் தயாரித்துள்ளார் தீபிகா படுகோனே. அதையடுத்து மகளுக்கு தாங்கள் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டதை அடுத்து ரசிகர்கள் வாழ்ந்து தெரிவித்து கொள்கிறார்கள். என்றாலும் இந்த பிறந்தநாளில் வெளியிட்டுள்ள புகைப்படங்களிலும் அவர்கள் தங்களது மகளின் முகத்தை காட்டவில்லை.