தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் கடந்த 2017-ல் வெளியான ‛அங்கமாலி டைரீஸ்' என்கிற படத்தின் மூலம் கவனிக்கத்தக்க இயக்குனராக மாறியவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. அதன்பிறகு ஜல்லிக்கட்டு, சுருளி என கிராமத்து பின்னணியில் எதார்த்த கதைகளை படமாக்கிய அவர், பின்னர் மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் மற்றும் மோகன்லாலை வைத்து மலைக்கோட்டை வாலிபன் ஆகிய படங்களை இயக்கினார்.
இந்த நிலையில் அவர் முதன்முறையாக ஹிந்தியில் அடி எடுத்து வைக்கிறார். பிரபல பாலிவுட் இயக்குனரான ஹன்ஷல் மேத்தா இந்த படத்தை தயாரிக்கிறார். கூடவே லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக இணைந்துள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார் என்கிற தகவலையும் சமீபத்தில் தனது சோசியல் மீடியா பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.




