தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரது இரண்டு கைகளிலுமே விலை உயர்ந்த கடிகாரங்களை அணிந்திருந்தார். இது பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், “நான் ஐரோப்பாவில் படிப்புக்காக சென்று தங்கி இருந்தபோது என் அம்மா என்னை அங்கே பார்க்க வரும்போதெல்லாம் தனது கைகளில் இரண்டு கடிகாரங்களை கட்டிக் கொள்வார். ஒன்று ஐரோப்பிய நேரத்திற்காகவும் இந்திய நேரத்திற்காகவும்.
இதை பார்த்து என் தந்தை கூட சில நேரங்களில் இப்படி இரண்டு கடிகாரங்களை கட்ட ஆரம்பித்தார். நானும் கூட அங்கே இருந்தபடி இங்கே அப்பா அம்மாவுடன் பேசும்போது அவர்கள் நேரம் விசாரிப்பார்கள் என்பதற்காக இரண்டு கடிகாரங்களை அணிய துவங்கினேன். அப்போது இருந்து இந்த பழக்கம் எனக்கு ஒட்டிக்கொண்டது. சில நேரங்களில் வேடிக்கைக்காக மூன்று கடிகாரங்களை கூட அணிவதும் உண்டு” என்று கூறியுள்ளார்.




