அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? |
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் பெண் குழந்தை பிறந்தது. தனது மனைவியின் பிரசவத்திற்காக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்திலிருந்து பாதியிலேயே நாடு திரும்பினார் விராட் கோலி.
குழந்தை பிறந்த பின் அதற்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்ட தம்பதியினர் அதன்பின் எந்த அப்டேட்டுகளையும் கொடுக்கவில்லை. சமீபத்தில் குழந்தையின் பெயர் சூட்டு விழாவை கொண்டாடியிருப்பார்கள் போலிருக்கிறது. அலங்கரிக்கப்பட்ட வீட்டில் தங்கள் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து குழந்தையின் பெயர் 'வாமிகா' என அறிவித்துள்ளார்கள்.
“காதல், நன்றி ஆகியவற்றுடன் நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், இந்த குட்டி வாமிகா மொத்தமாக வேறு ஒரு தளத்திற்கு எங்களை கொண்டு சென்றுவிட்டாள். கண்ணீர், சிரிப்பு, கவலை, பேரின்பம், சில நிமிடங்களில், சில நேரங்களில் அனுபவித்த உணர்வுகள்... தூக்கம் குறைவாக உள்ளது, ஆனால், எங்கள் இதயங்கள் நிரம்பியுள்ளன. உங்கள் அனைவரின் வாழ்த்துகள், பிரார்த்தனைகள், நல்ல ஆற்றல் ஆகியவற்றிற்கு நன்றி,” என அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
“எனது மொத்த உலகமும் ஒரே பிரேமில் உள்ளது” என விராட் கோலி அதற்குக் கமெண்ட் போட்டுள்ளார்.