லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவும்போது பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு 25 கோடியை அள்ளிக் கொடுத்தார். இதுதவிர மும்பை மாநகராட்சி, மும்பை போலீசுக்கும் தலா 2 கோடி வழங்கினார்.
தற்போது 2வது அலை பரவும்போது முதல் ஆளாக ஒரு கோடி கொடுத்து ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். இந்த தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று கவுதம் கம்பீர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு இந்த நிதியை வழங்கிய அக்ஷய் குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார் “என்னால் உதவ முடிந்ததற்கு நன்றி. இந்த நெருக்கடியில் இருந்து விரைவில் மீள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார்.