ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

ஒடிய மொழியில் வேகமாக வளர்ந்து வந்த இளம் பாடகி தபு மிஸ்ரா. ஒடிய மொழி படங்களில் 150க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். ஒடிய மொழி சினிமா சரித்திரத்தில் இவர் அளவிற்கு கொண்டாடப்பட்ட பாடகி இல்லை என்கிறார்கள். லட்சக் கணக்கான ரசிகர்களை கொண்டவர்.
36 வயதே ஆன தபு மிர்ஷா, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். பின்னர் கடந்த மாதம் 19ம் தேதி அவருக்கு மீண்டும் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
அவரின் மருத்துவ செலவை ஏற்பதாக ஓடிசா மாநில அரசு அறிவித்தது. அவரது ரசிகர்களும் அவருக்காக நிதி திரட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார்.
தபுவின் மரணத்திற்கு ஒடியா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட தலைவர்களும், திரையுலக பிரமுகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நவீன் பட்நாயக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் "தபு மிஷ்ரா ஒடியாவின் குரலாக என்றென்றும் நினைவு கூறப்படுவார்" என்று தெரிவித்துள்ளார்.