ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இந்த கொரோனா தாக்கத்தாலும் ஊரடங்காலும் கடந்த ஒரு வருட காலாத்திற்கும் மேலாக, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பலருக்கும் தனது சொந்த பணத்தில் இருந்து, பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறார் வில்லன் நடிகர் சோனு சூட். அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாகவே மாறிவிட்ட சோனு சூட், சமீபத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு, 18வயதான தனது மூத்த மகன் இஷானுக்கு மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காரை வாங்கி பரிசளித்ததாக தகவல் வெளியானது.
ஒருபக்கம் மக்களின் உதவிகளுக்காக பணம் செலவிடும் சோனு சூட், இந்த சமயத்தில் இப்படி ஆடம்பரமாக செலவிடுவாரா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. சோஷியல் மீடியாவிலும் இது எதிரொலித்தது. சோனு சூட்டின் கவனத்துக்கும் இந்த தகவல் வந்துள்ளது.
இதை தொடர்ந்து இதற்கு விளக்கம் அளித்துள்ள சோனு சூட், “அந்த விலை உயர்ந்த காரை நான் என் மகனுக்காக வாங்கவில்லை. சொல்லப்போனால் அந்த கார், சும்மா ட்ரையல் பாருங்களேன் என கூறி என் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.. அவ்வளவுதான்.” என கூறி சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், “தந்தையர் தினத்திற்கு நான் ஏன், என் மகனுக்கு பரிசு கொடுக்கவேண்டும்.? அவன் அல்லவா எனக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும்” என .நகைச்சுவையாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்..