ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
2008ம் ஆண்டு மும்பை தாக்குதல் பின்னணியில் உருவான வெப் சீரிஸ் ஸ்டேட் ஆப் ஸீஜ்: 26/11. ஜீ 5 தளத்தில் வெளியானது. தற்போது இரண்டாவது சீசன் ஸ்டேட் ஆப் ஸீஜ்: டெம்பிள் அட்டாக் என்ற பெயரில் திரைப்படமாக உருவாகி உள்ளது. இது குஜராத்தில் கோவிலில் பக்தர்களை பணயக் கைதிகளா சிறைபிடித்த தீவிரவாதிகளிடமிருந்து பக்தர்களை காப்பாற்றிய இந்திய ராணு வீரர்களின் கதை. இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் ஜீ5ல் நாளை (ஜூலை 9) வெளிவருகிறது.
இதில் அக்ஷய் கண்ணா ஹீரோவாக நடித்துள்ளார். என் எஸ் ஜி கமாண்டோவாக விவேக் தாஹியா தனது கதாபாத்திரத்தை தொடர்கிறார். மேலும் கவுதம் ரோட், சமீர் சோனி, பர்வீன் தபஸ், மஞ்சரி பட்னிஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். கென் கோஷ் இயக்கி உள்ளார். ஓய்வுபெற்ற கர்னல் சுந்தீப் சென் இதற்கு ஆலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் மும்பை தாக்குதலின் போது இரண்டாம் கட்ட என் எஸ் ஜி தலைவராக இருந்தவர்.
இதுகுறித்து இயக்குனர் கென் கோஷ் கூறியிருப்பதாவது: இது வெறும் படம் அல்ல. நம்மைக் காக்க என்றும் தங்கள் உயிர்களை பணயம் வைக்கும் இந்தியாவின் என் எஸ் ஜி கமாண்டோக்களுக்கு ஒரு அஞ்சலி. டெம்பிள் அட்டாக் திரைப்படத்தில் நமது நாயகர்களுக்கு உரிய, சரியான ஒரு அஞ்சலியைத் தர நாங்கள் முயற்சித்திருக்கிறோம் .என்றார்.