தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வளைய வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு ஆடியவர். ஒருகட்டத்தில் பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கவே, 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான்.
இந்தநிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜ் குந்த்ரா. போலீஸ் விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே தான் இந்த வேலைகளை ராஜ் குந்த்ரா செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஷில்பாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு செய்தி பலமாக அடிபட்டது.. அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவுடன் இருக்க பிடிக்காமல் அவரது கம்பெனி அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவே அப்போது, ஒரு விளக்கம் அளித்தார்.
“நான் ஷில்பாவுடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை என அவரது தோழிகளிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. அதுதான் இப்படி அப்படி என திரிந்து, நாங்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகும் அளவுக்கு வந்துவிட்டது. உண்மையில் ஒரு டீல் விஷயமாக தினசரி 20 மணி நேரம் ஆபிஸில் இருக்கிறேன்.. வீட்டில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் கூட வீட்டில் தலைகாட்டுவதற்கும் குளித்து உடைமாற்றிவிட்டு வருவதற்குமே சரியாக போய்விடுகிறது. உண்மை காரணம் இதுதான்” என கூறியிருந்தார் ராஜ்குந்த்ரா. ஒருவேளை அவர் குறிப்பிட்ட அந்த இருபது மணி நேர ஆபீஸ் ஒர்க் இதுவாகத்தான் இருந்திருக்குமோ என்னவோ ?




