ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவு கன்னிகளில் ஒருவராக வளைய வந்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் விஜய்யுடன் குஷி படத்தில் மேக்கரீனா பாடலுக்கு ஆடியவர். ஒருகட்டத்தில் பாலிவுட்டின் புதிய வரவுகளால் மவுசு குறைய தொடங்கவே, 2009ல் ராஜ் குந்த்ரா என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆனார். இவர்களுக்கு வியான் என்கிற ஒரு மகனும் இருக்கிறான்.
இந்தநிலையில் தற்போது சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக பெண்களை ஏமாற்றி ஆபாசப்படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார் ராஜ் குந்த்ரா. போலீஸ் விசாரணையில் ஷில்பா ஷெட்டிக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமலேயே தான் இந்த வேலைகளை ராஜ் குந்த்ரா செய்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் ஷில்பாவும் அவரது கணவரும் பிரிந்து வாழ்வதாக ஒரு செய்தி பலமாக அடிபட்டது.. அவரது கணவர் ராஜ் குந்த்ரா, ஷில்பாவுடன் இருக்க பிடிக்காமல் அவரது கம்பெனி அலுவலகத்திலேயே தங்கிவிடுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இதுகுறித்து ஷில்பாவின் கணவர் ராஜ் குந்த்ராவே அப்போது, ஒரு விளக்கம் அளித்தார்.
“நான் ஷில்பாவுடன் அதிக நேரம் செலவிடுவது இல்லை என அவரது தோழிகளிடம் குறைபட்டுக் கொண்டிருக்கிறார் ஷில்பா. அதுதான் இப்படி அப்படி என திரிந்து, நாங்கள் பிரிந்து வாழ்வதாக செய்திகள் வெளியாகும் அளவுக்கு வந்துவிட்டது. உண்மையில் ஒரு டீல் விஷயமாக தினசரி 20 மணி நேரம் ஆபிஸில் இருக்கிறேன்.. வீட்டில் இருக்கும் அந்த நான்கு மணி நேரமும் கூட வீட்டில் தலைகாட்டுவதற்கும் குளித்து உடைமாற்றிவிட்டு வருவதற்குமே சரியாக போய்விடுகிறது. உண்மை காரணம் இதுதான்” என கூறியிருந்தார் ராஜ்குந்த்ரா. ஒருவேளை அவர் குறிப்பிட்ட அந்த இருபது மணி நேர ஆபீஸ் ஒர்க் இதுவாகத்தான் இருந்திருக்குமோ என்னவோ ?