ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் சமீபத்தில் தனது பாஸ்போர்ட் தேதி விரைவில் காலாவதியாக இருக்கிறது என்றும், அதை புதுப்பிப்பதற்காக தனக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அப்போது, நீதிமன்றம் அவர் மீது வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு, தன் மீதுள்ள இரண்டு வழக்குகள் பற்றிய விபரங்களை அந்த மனுவில் தெரிவித்திருந்தார் கங்கனா.
ஆனால் பாலிவுட்டின் பிரபல பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், கங்கனா தன்மீது அவதூறான தகவல்களை ஒரு டிவி நிகழ்ச்சியின்போது கூறினார் என்று அவர் மீது அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும் நிலையில், அதுபற்றி கங்கனா நீதிமன்றத்தில் தெரிவிக்காமல், உண்மையை மறைத்து விட்டார் என்று குற்றம் சாட்டிய ஜாவேத் அக்தர். கங்கனாவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க கூடாது என்று அந்தேரி மாநகர நீதிமன்றத்தில் இடையீட்டு மனு செய்தார்.
இந்தநிலையில் ஜாவேத் அக்தரின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தில் கங்கனா கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஜாவேத் அக்தர் அளித்த புகாரின் படி சாட்சியங்கள் என யாரிடமும் விசாரிக்காமல் போலீசார் தன்மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளா கங்கனா, அவரது மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார்.