விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தற்போது ஷெர்லின் சோப்ரா விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு மும்பை போலீசின் சைபர் குற்றப்பிரிவின் முன் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விசாரணையில் இருந்து விலக்கு கேட்டு ஷெர்லின் சோப்ரா முன் ஜாமீன் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே ஆபாச பட விவகாரத்தில் ஷெர்லின் சோப்ராவின் பங்கு என்ன என்று பாலிவுட் வட்டராங்கள் பரபரப்பாகி உள்ளன.
ராஜ் குந்த்ராவிடம் பணிபுரிந்த அரவிந்த் ஸ்ரீவத்சவா என்பவர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மாநிலங்களில் 90க்கு மேற்பட்ட ஆபாச படங்களை பரப்பி உள்ளதாகவும், ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரத்தில் இவர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார் என்றும் போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன. அரவிந்தின் வங்கி கணக்கில் இருந்த 3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.