திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட் நடிகரும் ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சன் சிறிது காலத்திற்கு படங்களில் நடிப்பதை தள்ளி வைத்திருக்கிறார் என்றொரு தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது. தற்போது அதுகுறித்து முழு தகவலும் தெரிய வந்துள்ளது.
அபிஷேக் பச்சன் நடிப்பில் தற்போது 'தேஸ்வி' என்கிற படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து லீலாவதி மருத்துவமனையில் அவருக்கு தற்போது மேஜர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.
இதையடுத்து அபிஷேக் பச்சனை சில மாதங்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் குடும்பத்தினருடன் தங்கி ஓய்வெடுக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.