தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் |
பாலிவுட்டின் வசூல் நாயகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். அவர் நடித்த 'பெல்பாட்டம்' படம் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா தவிர மற்ற முக்கிய வட இந்திய மாநிலங்களில் தியேட்டர்களில் வெளியானது. ஆனால், மக்கள் எதிர்பார்த்த அளவிற்கு தியேட்டர்களுக்கு வரவில்லை. பொதுவாக அக்ஷய்குமார் படம் வெளிவந்தால் ஒரு வாரத்திற்குள்ளாகவே 100 கோடி வசூலைத்தாண்டி விடும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் கடந்த பத்து நாட்களில் 25 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. எதிர்பார்த்த தொகையை விடவும் அது மிகவும் குறைவுதான். இதற்கு மேலும் வசூல் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
பட வெளியீட்டிற்கு முன்பு படத்தைத் தியேட்டர்களில் வெளியிட தாங்கள் பெரிய ரிஸ்க் எடுப்பதாகவும், இந்தப் படம் 30 கோடி ரூபாய் வசூலித்தாலே அது 100 கோடி ரூபாய் வசூலிப்பதற்கு சமம் என்றும் அக்ஷ்ய்குமார் தெரிவித்திருந்தார்.
அக்ஷய்குமார் படத்திற்கே இந்த நிலைமை என்றால் தென்னிந்தியாவில் வெளியாகும் படங்களின் வசூல் நிலைமை எப்படியிருக்கும் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என திரையுலகில் கவலைப்படுகிறார்கள். அதனால், மக்கள் முழுவதுமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில் பல பெரிய படங்களை பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள்.