ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
ஏ.எல். விஜய் இயக்கிய தலைவி படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத். தனது இன்ஸ்டாகிராமில் அதிரடியான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கி வரும் கங்கனா ரணாவத், தற்போது சமந்தா - நாகசைதன்யா பிரிந்து விட்டதாக அறிவித்ததை அடுத்து தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார்.
அதில், விவாகரத்து என்றாலே தவறு ஆணின் பக்கம்தான் இருக்கும். பெண்களை ஆடைகளை போன்று பயன்படுத்தி எறிந்து விட்டு பின்னர் அவர்களை தங்கள் நண்பர்கள் போல் என்று கூறிக்கொள்கிறார்கள். நூற்றில் ஒரு பெண் வேண்டுமானால் தவறு செய்யலாம். மேலும், இதுபோன்ற நடிகர்களை ரசிகர்களும் ஊடகங்களும் ஊக்கப்படுத்துவது வெட்கக்கேடானது. நடிகர்களை நியாயப்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரிக்கிறார்கள். இந்தமாதிரி விவாகரத்து என்பது முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வளர்ந்து வருகிறது என்று நாகசைதன்யாவை விமர்சனம் செய்துள்ளார் கங்கனா ரணாவத்.
அதோடு நில்லாமல், தற்போது அமீர்கான் நடிக்கும் படம் மூலம் ஹிந்தியில் நாகசைதன்யா அறிமுகம் ஆவதையும் குறிப்பிட்டு அமீர்கானையும் விமர்சித்துள்ளார் கங்கனா. அதாவது, இந்த நடிகர் பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் என்று அழைக்கப்படுகிறார். பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க் கையை அழித்தார். அப்படிப்பட்டவர் இப்போது நாக சைதன்யாவுக்கு பாலிவுட்டில் வழிகாட்டும் ஒளியாகியிருக்கிறார் என்று அமீர்கானையும் விமர்சனம் செய்திருக்கிறார் கங்கனா ரணாவத்.