500 கோடி அறிவிப்பு, அப்புறம் பார்ட்டி, சொகுசு கார் உண்டா... | மீண்டும் கிசுகிசு : அர்ஜூன் தாஸ், ஐஸ்வர்ய லட்சுமி காதலா? | தெலுங்கு சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது… | ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படத்தின் மூலம் நடிகர் பிரித்விராஜ் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக பாலிவுட் நடிகர் விவேக் ஓபராயை அழைத்துவந்து நடிக்க வைத்திருந்தார் பிரித்விராஜ். விவேக் ஓபராய்க்கும் இந்தப் படம் பெரிய பெயர் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் மீண்டும் மலையாள திரையுலகில் வில்லனாகவே ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் விவேக் ஓபராய். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தற்போது பிரித்விராஜ் ஹீரோவாக நடித்து வரும் கடுவா என்கிற படத்தில் வில்லனாக நடிக்கிறார் விவேக் ஓபராய். இந்த படத்தில் காட்டு ராஜாவாக கடுவா என்கிற கதாபாத்திரத்தில் பிரித்விராஜ் நடிக்க அவரைப் பிடிப்பதற்காக நியமிக்கப்படும் காட்டிலாகா அதிகாரியாக விவேக் ஓபராய் நடிக்கிறார் இதை குறிப்பிடும் விதமாக "வேட்டைக்காரன் வந்துவிட்டான்.. எச்சரிக்கையாக இரு கடுவா.. இன்று முதல் ஆக்சன் ஆரம்பம்" என்று குறிப்பிட்டு படப்பிடிப்பில் தான் கலந்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் விவேக் ஓபராய்.