தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கொரோனா முதல் அலை முடிந்து இரண்டாவது அலை துவங்கி மீண்டும் லாக் டவுன் போடப்படும் என திரையுலகில் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதனாலேயே இயக்குனர்கள் பலரும் விரைந்து படப்பிடிப்பு நடத்தி முடிக்கும் விதமான கதைகளுக்கு முன்னுரிமை தந்து உள்ளூர்களிலேயே படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். அப்படி குறுகியகால தயாரிப்பாக உருவாகியுள்ள ஒரு படம் தான் மலையாளத்தில் குஞ்சாக்கோ போபன் நடித்துள்ள 'பகலும் பாதிராவும்'.
மலையாளத்தில் ராஜாதிராஜா, மாஸ்டர்பீஸ், ஷைலாக் என மம்முட்டி நடித்த படங்களையே தொடர்ந்து இயக்கிவந்த அவரது ஆஸ்தான இயக்குனர், அஜய் வாசுதேவ் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கர்ணன், ஜெய்பீம் படங்களில் கதாநாயகியாக நடித்த ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. கடந்த டிச-8ஆம் தேதி தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பை வெறும் பத்தே நாட்களில் நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் அஜய் வாசுதேவ். ஆச்சர்யமான விஷயம் தான்.