ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தெலுங்கில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா ஒருபக்கம் சினிமாவில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஒளிபரப்பாகும் எபிசோடுக்காக சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவிதேஜா கலந்துகொண்டுள்ளார். இதுபற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு ரவி தேஜாவும் ஆளானார். அதுபற்றி இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவே ரவிதேஜாவிடம் கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அதுமட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன் ஒருமுறை ராவிதேஜாவை பாலகிருஷ்ணா அறைந்தார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என ரவிதேஜாவிடம் இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கேட்க அதற்கும் பதில் சொல்கிறார் ரவிதேஜா.. இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இந்த இரண்டு கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்துவிடும்.