ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கில் சீனியர் நடிகரான பாலகிருஷ்ணா ஒருபக்கம் சினிமாவில் நடித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தனியாக துவங்கியுள்ள ஆஹா என்கிற ஒடிடி தளத்தில் 'அன்ஸ்டாப்பபில் வித் என்பிகே' என்கிற ரியாலிட்டி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். கிறிஸ்துமஸ் பண்டிகையில் ஒளிபரப்பாகும் எபிசோடுக்காக சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.
இந்தநிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரவிதேஜா கலந்துகொண்டுள்ளார். இதுபற்றிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்ட போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கு ரவி தேஜாவும் ஆளானார். அதுபற்றி இந்த நிகழ்ச்சியில் நேரடியாகவே ரவிதேஜாவிடம் கேட்டுள்ளார் பாலகிருஷ்ணா.
அதுமட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன் ஒருமுறை ராவிதேஜாவை பாலகிருஷ்ணா அறைந்தார் என்று மீடியாக்களில் ஒரு செய்தி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என ரவிதேஜாவிடம் இந்த நிகழ்ச்சியில் பாலகிருஷ்ணா கேட்க அதற்கும் பதில் சொல்கிறார் ரவிதேஜா.. இந்தநிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இந்த இரண்டு கேள்விகளுக்கும் நமக்கு விடை தெரிந்துவிடும்.