சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? | பிளாஷ்பேக்: புதுப்புது அனுபவங்களோடு 'த்ரில்லர்' கதையாக வந்து, திகைப்பில் ஆழ்த்திய சிவாஜியின் “புதியபறவை” | மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் |
ஜோக்கர் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவன ஈர்ப்பு செய்த குரு சோமசுந்தரம், இங்கு மட்டுமல்ல மலையாள திரையுலக படைப்பாளிகளையும் ரொம்பவே கவர்ந்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து இவர் நடித்த மின்னல் முரளி படம் வெற்றி பெற்றுள்ளதுடன் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்துள்ளது.
இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை பார்த்துவிட்டு மோகன்லால் தான் இயக்க உள்ள பாரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அழைத்துள்ளார். இந்த நிலையில் மின்னல் முரளிக்கு கிடைத்த வரவேற்பால் ஏற்கனவே குரு சோமசுந்தரம் மலையாளத்தில் நடித்து வந்த சட்டம்பி என்கிற படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு நண்பனாக முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்தப் படத்தை அபிலாஷ் எஸ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.