கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி |
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான பிரேமம் படத்தை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இருவரையும் வைத்து கோல்ட்(தங்கம்) என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற மாநாடு படத்தை சமீபத்தில் பார்த்த அல்போன்ஸ் புத்ரன் படம் குறித்தும் அதில் பங்கு பெற்றவர்கள் குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, “மன்மதன் படத்தில் நடித்தது போன்ற சிம்புவை மீண்டும் இதில் பார்க்க முடிந்தது. எஸ்.ஜே.சூர்யாவும் கூட அவரது டைரக்ஷனில் நடிப்பது போன்றே ரிலாக்ஸாக நடித்திருந்தார். தவிர வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி இந்த படத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றுள்ளது..
சரோஜா படத்தில் இடம்பெற்ற 'நிமிர்ந்து நில் துணிந்து செல்' என்கிற பாடல், நான் பலமுறை சோர்ந்துபோய் அமர்ந்த நேரத்திலெல்லாம் எனக்கு உற்சாகம் அளித்து, ஊக்கப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்ல உதவியது. இந்தப் பாடலை உருவாக்கிய உங்கள் இருவருக்கும் நான் என்ன திருப்பி செய்யப்போகிறேன் என்றுதான் தெரியவில்லை” என உருக்கமாக கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்திரன்.