இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த இரண்டு அலைகளை விட இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் இந்த மூன்றாவது அலையால் திரையுலகை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த மூன்றாவது அலையின் வீரியம் குறைவோ என்னவோ, அனைவரும் ஒருசில நாட்களிலேயே நல்லபடியாக குணமாகியும் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சுரேஷ்கோபியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு விட்டேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம்தான் தமிழில் தான் நடித்து முடித்துள்ள தமிழரசன் என்கிற படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சுரேஷ்கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்தான் மலையாளத்தில் தான் நடித்துவரும் பாப்பன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார்.