இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள நடிகர் திலீப், நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக, கடந்த சில் வருடங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.. பின்னர் மூன்றுமாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடக்கும் நிலையில், இதே கடத்தல் விவாகரம் தொடர்பாக திலீப்பின் நண்பர் ஒருவர் அவருக்கு எதிராக அளித்த புகாரின் படி, புதிய வழக்கு ஒன்று திலீப் மீது பதியப்பட்டது. இது கடந்த இரண்டு மாதங்களாக அவருக்கு மிகப்பெரிய குடைச்சலை கொடுத்து வருகிறது.
இந்த புதிய வழக்கில் முன்ஜாமீன் கேட்டு திலீப் விண்ணப்பித்திருந்தாலும், இப்போதுவரை அவருக்கு அது கிடைக்கவில்லை. சமீபத்தில் மூன்று நாட்கள் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் முன் விசாரணைக்கு ஆஜரானார் திலீப். அதுகுறித்த விசாரணை அறிக்கை கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்தநிலையில் திலீப் வசம் உள்ள அவரது மொபைல் போன்களை நீதிமன்றத்தில் இன்று (திங்கள்) ஒப்படைக்கும்படி உத்தரவிடப்பட்டது. திலீப் கூடுதலாக ஒருநாள் அவகாசம் கேட்டும் நீதிமன்றம் சம்மதிக்கவில்லை. இதையடுத்து திலீப்பின் 3 மொபைல்கள், அவரது சகோதரர் (2) மற்றும் அவரது மைத்துனர் (1) ஆகியோருடையதையும் சேர்த்து மொத்தம் ஆறு மொபைல் போன்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார் திலீப்.