திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மம்முட்டி நடிப்பில் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு படம் அடுத்தடுத்து அதன் நான்கு பாகங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் வில்லன்களில் ஒருவராக கன்னட நடிகர் ஹரிஷ் ராஜ் என்பவர் நடித்து வருகிறார்.
கன்னடத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து வரும் இவர் ஒரு இயக்குனரும் கூட. நான்கு படங்களுக்கு மேல் இயக்கியுள்ள இவர் தற்போது மலையாள படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து கூறும்போது, மம்முட்டி போன்ற மிகப்பெரிய நடிகருடன் நடிப்பது ஒரு பக்கம் சந்தோசம் என்றால் இந்த படத்தில் எனது கதாபாத்திரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது, கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லக்கூடியது என்பதில் கூடுதல் சந்தோசம். நிச்சயமாக மலையாள ரசிகர்கள் என்னை வில்லனாக ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.