இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் ஜூலை காற்றில் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை சம்யுக்தா மேனன். தற்போது மலையாளம் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறிப்பாக சமீபத்தில் தெலுங்கில் வெளியான பீம்லா நாயக் படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் சம்யுக்தா மேனன். அதுமட்டுமல்ல தனுஷ் முதன்முறையாக தெலுங்கில் நடிக்கும் வாத்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்தநிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து கிடைத்த இடைவெளியில் ஓய்வுக்காக உத்தரகாண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா பறந்துவிட்டார் சம்யுக்தா மேனன். பள்ளியில் படிக்கும் நாட்களிலிருந்து உத்தரகாண்ட் மாநிலத்திற்கு செல்வது, கங்கை நதியில் நீராடுவது என்பது இவரது கனவாகவே இருந்து உள்ளது. தற்போது உத்தரகாண்ட் பகுதியில் விடுமுறையை கொண்டாடிவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சம்யுக்தா மேனன் கூடவே தனது மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஓடும் கங்கை நதியின் சலசலப்பை கேட்க முடிகிறது. இமயமலையில் இருந்து வீசும் தென்றல் என்னை வருடுகிறது. இதற்கு முன் நான் இங்கே இருந்து இருக்கிறேன்.. இங்கேயே வாழ்ந்து இருக்கிறேன் என்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. என் சிறுவயது கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி' என்று கூறியுள்ளார் சம்யுக்தா மேனன்.