இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் நடித்து வரும் ‛ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக சிறுசிறு இடைவெளிகளில் நடைபெற்று வருகிறது. இயக்குனர் பிளஸ்சி இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இந்தப்படத்தில் அரபு நாடுகளில் ஒட்டகம் மேய்க்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தில் கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோர்டன் நாட்டில் 'வாடி ரம்' எனப்படும் பாலைவனத்தை ஒட்டிய நகரத்தில் தங்கி படப்பிடிப்பை நடத்தி வந்த நிலையில் தான் கொரோனா முதல் அலை உருவானது. அதன் காரணமாக, திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கேயே கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேல் தங்கி இருந்து, படப்பிடிப்பை நடத்த முடியாமல் ஊர் திரும்பினர் ஆடு ஜீவிதம் படக்குழுவினர்.
இதைத் தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களில் மீண்டும் வெளிநாடு சென்று இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்த முடியாத சூழல் இருந்ததால் உள்ளூரிலேயே நான்கைந்து படங்களில் நடித்து முடித்துவிட்டார் பிரித்விராஜ்.
இந்த நிலையில் சமீபத்தில் அல்போன்ஸ் புத்ரன் நடிப்பில் உருவாகிவரும் கோல்ட் படத்தை முடித்து விட்ட பிரித்விராஜ் சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு தற்போது ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பை தொடர்வதற்காக அல்ஜீரியா சென்றுள்ளார். தற்போது சஹாரா பாலைவனத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இந்த தகவலை கூறியுள்ளார் பிரித்விராஜ்.