ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தற்போது தான் நடித்து வரும் ஆடுஜீவிதம் படத்திற்காக சகாரா பாலைவனத்தில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரித்விராஜ், இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த பின்பு கேரளா திரும்பியதும் தீர்ப்பு என்கிற படத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த வருடமே படத்திற்கான அறிவிப்பும் வெளியானது. இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர். திலீப்-சித்தார்த் இணைந்து நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார்.
இந்தப்படத்தில் பரிசோதனை முயற்சியாக அலெகோரி என்கிற புதிய பாணியில் கதையை எழுதியுள்ளார் கதாசிரியரும் நடிகருமான முரளி கோபி. அதாவது, படத்தில் மேம்போக்காக ஒரு கதை சொல்லப்பட்டாலும் அதில் இன்னொரு கதையும் மறைமுகமாக சொல்லப்பட்டு கொண்டே வரும். இந்த இரண்டுக்குமே சம்பந்தம் இல்லாதது போல் தெரிந்தாலும் மறைமுகமாக சொல்லப்படும் கதையை மேம்போக்காக சொல்லப்படும் கதை, படம் முழுவதும் பிரதிபலிக்கும் என்கிறார் முரளி கோபி. ஹாலிவுட் படங்களில் இதுபோன்று ஜானரில் சில படங்கள் வெளியாகியுள்ளன மலையாளத்தில் இதுதான் முதல் முறை என்று கூறியுள்ளார்.
பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவர் தான் இந்த முரளி கோபி. அதுமட்டுமல்ல கம்மார சம்பவம் படத்திற்கும் கதை எழுதியதும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.