சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் |

ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இன்னொரு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தனது 15வது படத்தில் நடிக்கும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் நடிகர் ராம்சரண். ஏற்கனவே ஐதராபாத்தில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பஞ்சாபில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரணுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்துள்ளதை பஞ்சாப்பில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்க்க முடிந்தது..
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார், ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படங்களும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பு பகுதியில் கூடிய பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிக்க, அதிலும் ராம்சரண் அவர்கள் ஒவ்வொருவரின் மொபைல் போனையும் வாங்கி அவர்களுடன் தானே செல்பி எடுத்து கொடுத்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.