தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மலையாள முன்னணி நடிகரான திலீப் மீது பிரபல நடிகையை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் விசாரணை அதிகாரியை கொலை செய்ய திட்டமிட்ட வழக்கு என இரண்டு பெரிய கிரிமினல் வழக்கு நடந்து வருகிறது. திலீப்புக்கு எதிரான வலுவான ஆதாரங்களை போலீசார் திரட்டி உள்ளனர். விரைவில் நடிகை கடத்தல் வழக்கு முடிவடைய இருக்கிறது. இதில் திலீப்புக்கு எப்படியும் தண்டனை கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் திலீப் திடீரென்று நேற்று சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்தினார். முதல்நாள் இரவே சபரிமலைக்கு வந்து தங்கியிருந்த அவர் நேற்று அதிகாலை சன்னிதானத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது அவர் விரதம் இருந்தவர்கள் அணியும் ஆடையும், மாலையும் அணிந்திருந்தார். அவரது பெயரில் சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. அவருடன் அவரது உதவியாளரும், மானேஜரும் மட்டுமே உடன் வந்திருந்தனர்.
இரண்டு குற்ற வழக்கிலிருந்தும் தனக்கு விடுதலை கிடைக்க வேண்டும். தனது கலை பயணமும், வாழ்க்கை பயணமும் எந்தவித இடையூறுமின்றி நடக்க வேண்டும் என்று அவர் வேண்டுதல் செய்ததாக கூறப்படுகிறது.