தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மகாநடி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வனா என்பவர் இயக்குகிறார். தெலுங்கில் தற்போது தமன், தேவிஸ்ரீபிரசாத் என முன்னணி இளம் இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கோ மலையாள அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் என்பவரை ஒப்பந்தம் செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்தவர். இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கிய இந்த படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இவர், இந்த படத்தில் இரண்டு சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்ததுடன் பின்னணி இசையிலும் மிரட்டியிருந்தார்.
ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இவரை சந்தித்தபோது உன்னுடைய பாடல் தான் பல இடங்களில் தற்போது ஒலித்து வருகிறது என்று மனமுவந்து பாராட்டியிருந்தார். ஹிருதயம் படத்தின் ஹிட் பாடல்களும் ஏ.ஆர் ரகுமானின் பாராட்டும் இவருக்கு எளிதாக விஜய்தேவரகொண்டா படம் மூலம் தெலுங்கில் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.