அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு |
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மோகன்லால் வீட்டில் இருந்து யானை தந்தங்கள் மீட்கப்பட்டது. வனத்துறையின் உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தங்கள் வைத்திருப்பது இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி குற்றமாகும். இதனால் கேரள மாநில வனத்துறை மோகன்லால் மீது பெரும்பாபூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் கேரள அரசு மோகன்லால் உரிய அனுமதி முன்பே பெற்றுள்ளார் என்று கூறி அவர் மீதான வழக்கை வாபஸ் பெற நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை எதிர்த்து பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூ என்ற இரு சமூக ஆர்வலர்கள் முதலில் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் எதிர்மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து. இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் பெரும்பாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு. பவுலோஸ் மற்றும் ஜேம்ஸ் மேத்யூவின் வாதங்களை கேட்ட பின்னர்தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும். என்று பெரும்பாவூர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. அதோடு இந்த விசாரணையை 3 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதித்தது. இதனால் இந்த யானை தந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.