திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
மலையாள திரையுலகை பொருத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தாலும் கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்களது வியாபார எல்லையும் வசூல் இலக்கும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக மலையாள திரையுலகில் ஒரு ஹிட் படம் 50 கோடி வசூலை தொடுவது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன என்கிற படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
ஒரு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக என்கவுன்டர் செய்து கொல்லப்படுகின்றனர். ஆனால் வழக்கறிஞரான பிரித்விராஜ் இது அரசியல் காரணங்களுக்காக போலியாக நடத்தப்பட்ட என்கவுன்டர் என வாதிட்டு உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வருவார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.