ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பிரபல பின்னணி பாடகர் கேகே நேற்று (ஜூன் 1) மாரடைப்பால் திடீரென காலமானார். இந்த செய்தி இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதமர் உள்ளிட்ட பல பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். பாலிவுட் பாடகராக அறியப்பட்ட கேகே என்கிற கிருஷ்ணகுமார் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். குறிப்பாக தமிழில் அவர் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி உள்ளன.
அதேசமயம் மலையாளத்தில் அவர், பிரித்விராஜ் நடிப்பில் 2009ல் வெளியான புதியமுகம் என்கிற படத்தில் இடம்பெற்ற ரகசியமாய் என்கிற ஒரே ஒரு பாடலை மட்டுமே பாடியுள்ளார். அதுமட்டுமல்ல கேரளாவை பூர்வீகமாக கொண்ட பாடகர் கேகே மலையாளத்தில் ஒரே ஒரு பாடலை பாடி இருப்பது தான் ஆச்சரியமான விஷயம்.
அந்த பாடலை பாடி கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்குப் பிறகு அவரிடம், நீங்கள் ஏன் மலையாளத்தில் பாடுவது இல்லை என அவரிடம் கேட்கப்பட்டபோது, “மற்ற மொழிகளை விட மலையாளத்தில் வார்த்தைகளை உச்சரிப்பது எனக்கு சற்று சிரமமானதாகவே இருக்கிறது, மற்ற மொழிகளில் பாடும்போது அவற்றுக்கு தோதாக எனக்கு ஏற்றவாறு அவற்றை மாற்றி எழுதி பாடிக்கொள்ள முடிகிறது. ஆனால் மலையாளத்தில் அவ்வாறு செய்ய முடிவதில்லை இத்தனைக்கும் நான் பேசும் மலையாளம் நன்றாக இருக்கிறது நீங்கள் பாடலாமே என்று பலரும் கூறினாலும் எனக்கு அது ஏற்புடையதாக தெரியவில்லை” என்று அப்போது கூறியிருந்தார் பாடகர் கேகே.