தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கேரளாவில் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகை, காரில் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கு எர்ணாகுளம் நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பிரபல நடிகர் திலீப், போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டார்.
வழக்கில் மேல்முறையீடு செய்யுமாறு பாதிக்கப்பட்ட நடிகை கேரள முதல்வரை சந்தித்து கோரிக்கை வைத்தார். திலீப் விடுதலையானதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து அவதூறு பரப்பி வருகிறார்கள், அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதனால் மனவேதனை அடைந்த நடிகை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பாதிக்கப்பட்டவராகவோ, உயிர் தப்பியவராகவோ இல்லாமல், ஒரு சாதாரண மனிதராக என்னை வாழ விடுங்கள். நான் செய்த தவறு என்னவென்றால், சம்பவம் நடந்தவுடன் போலீசில் புகார் அளித்ததுதான். நடந்தது நம் விதி என்று நினைத்துக்கொண்டு நான் மவுனமாக, எதுவும் நடக்காததுபோல் இருந்திருக்க வேண்டும்.
பின்னாளில் வீடியோ வெளியாகி, ஏன் புகார் செய்யவில்லை என்று மக்கள் கேள்வி எழுப்பினால் நான் தற்கொலை செய்திருக்க வேண்டும். இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளி என் மீது குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டது என் கவனத்துக்கு வந்தது. சம்பவத்தின்போது என்னை வீடியோ எடுத்தது அவர்தான் என்பதையும் அவர் சொல்லி இருக்க வேண்டும். இதுபோல் குற்றம்சாட்டி, ஆன்லைனில் வெளியிடுபவர்களோ அல்லது அவர்களுடைய உறவினர்களோ இத்தகைய சூழ்நிலையை தங்களது வாழ்நாளில் சந்திக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.