ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது அறிமுக நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார். சினிமா வாய்ப்பு தருவதாக கூறி பலாத்காரம் செய்ததாக அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தப்பிச் சென்ற விஜய்பாபு தற்போது திரும்பி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சம்பந்தப்பட்ட நடிகையின் சம்மத்துடன் தான் எல்லாம் நடந்தது. தற்போது திடீரென புகார் அளித்துள்ளார். இதற்கு பின்னால் சதி உள்ளது. கோர்ட்டில் நான் நிரபராதி என்று நிரூபிப்பேன் என்று விஜய்பாபு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வழக்கு தொடர்ந்த அந்த நடிகை, வழக்கை வாபஸ் பெற விஜய்பாபு தரப்பில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: புகாரை வாபஸ் பெறுமாறு விஜய்பாபுவின் நண்பர் என்னிடம் பேசினார். நான் மறுத்துவிட்டேன். ஒரு கோடி ரூபாய் வரை தருவாகவும் அவர் சொன்னார். புகாரை வாபஸ் பெற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிவிட்டேன். என்று கூறியிருக்கிறார்.