தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தமிழில் மண்ணுக்குள் வைரம், பூந்தோட்டக் காவல்காரன், தாய்மேல் ஆணை, இதயத் திருடன் உட்பட பல படங்களில் நடித்தவர் வாணி விஸ்வநாத். மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
மலையாளியான இவர் மலையாள நடிகர் பாபுராஜை திருமணம் செய்து கொண்டார். பாபுராஜ் தமிழில் ஜனா, ஸ்கெட்ச், வீரமே வாகை சூடும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கேரளாவில் வசித்து வரும் இவர்கள் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2018ம் ஆண்டு கூடாஷா என்ற படத்தை தயாரித்தனர். படத் தயாரிப்புக்காக கேரள மாநிலம் திருவில்வமலா என்ற பகுதியை சேர்ந்த ரியாஸ் என்பவரிடம் ரூ.3.14 கோடியை கடனாக பெற்றுள்ளனர். ஆனால் வாங்கிய கடனை திருப்பித் தராமல் ஏமாற்றி விட்டதாக கணவன், மனைவி இருவர் மீது ரியாஸ் ஒட்டப்பாலம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.