விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
மலையாள திரையுலகில் மிகப்பிரமாண்டமான உருவான வரலாற்று படங்களான பழசிராஜா மற்றும் மரைக்கார் உள்ளிட்ட படங்களின் படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருட காலகட்டத்திலேயே மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டனர். ஆனால் பிரித்விராஜ் நடிப்பில் இயக்குனர் பிளஸ்சி டைரக்சனில் உருவாகி வந்த ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட ஐந்து வருடங்களை எட்டிய நிலையில் சமீபத்தில் முடிவடைந்துள்ளது. ஆடுஜீவிதம் என்கிற நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்த கதையில் பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் பிரித்திவிராஜ் நடித்துள்ளார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார்.
இந்த படத்தின் கதை கேரளா மற்றும் அரபு நாடியில் உள்ள பாலைவன பகுதிகளில் விதவிதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பிரித்விராஜுக்கும் வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க வேண்டி இருந்தது. அப்படி இடைவெளி விட்டுவிட்டு நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜோர்டன் நாட்டில் நடைபெற்றபோது கொரோனா தாக்கம் காரணமாக மீண்டும் தடங்கலை சந்தித்தது.
இந்த நிலையில் இந்த வருட துவக்கத்தில் மீண்டும் ஜோர்தான் சென்று மீதி காட்சிகளை படமாக்கி திரும்பிய ஆடுஜீவிதம் படக்குழுவினர் சமீபத்தில் கேரளாவில் உள்ள ராணி என்கிற பகுதியில் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும், 14 வருடங்களாக இந்த கதையில் பயணித்து, ஐந்து வருடங்களாக படப்பிடிப்பில் கடுமையான உழைப்பை கொடுத்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து, ஒரே நோக்கில் இந்த படத்தை இயக்குனர் பிளஸ்சி முடித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.