சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தற்போது தனது புதிய படமான ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில நாட்களாகவே யாரோ சில மர்ம நபர்கள் பவன் கல்யாணை பின் தொடர்ந்து நோட்டம் பார்த்து வருவதாக டோலிவுட் மீடியாக்களில் ஒரு பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ஜூபிலி ஹில்சில் உள்ள பவன் கல்யாண் வீட்டிற்கு வந்த இருவர் அவரது பாதுகாவலரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அதையடுத்து ஐதராபாத் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் பவன் கல்யாணின் வாகனத்தை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வருகிறார்களாம். அதன் காரணமாக இது குறித்து பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி சார்பில் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்கள். மேலும் ஆந்திர அரசுக்கு எதிராக விஜயவாடாவில் பவன் கல்யாண் ஆற்றிய உரை அங்குள்ள மீடியாக்களில் தலைப்பு செய்தியாக இடம் பிடித்துள்ளது. அதன் பிறகுதான் இதுபோன்று மர்ம நபர்கள் அவரைப் பின் தொடர்ந்து நோட்டமிடுவதாகவும் பவன் கல்யாண் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.