இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கண்ட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் தற்போது கன்னடம் மட்டுமின்றி தமிழிலும் ஜெயிலர், கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கன்னடத்தில் அவரது நடிப்பில் வெளியே உருவான வேதா திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் வேதா படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ல் சிவராஜ்குமார் நடிப்பில் கேங்ஸ்டர் படமாக வெளியான முப்டி படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ‛பைரதி ரணகல்' என டைட்டிலும் வைக்கப்பட்டுள்ளது. முப்டி படத்தில் சிவராஜ்குமார் நடித்திருந்த கதாபாத்திரத்தின் பெயரையே இந்தப்படத்தின் டைட்டிலாக மாற்றியுள்ளார்கள். முதல் பாகத்திற்கு முன்னதாக சிவராஜ்குமாரின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதை சொல்லும் விதமாக ப்ரீக்வல் ஆக இந்த இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நார்தன் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இந்த முப்டி திரைப்படம் தான் தற்போது தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடித்து வரும் பத்து தல என்கிற பெயரில் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.