தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சமீப வருடங்களாக கன்னட சினிமா தமிழ் மற்றும் தெலுங்கு, ஏன் மலையாள படங்களுக்கு கூட சவால் விடும் வகையில் மிக அருமையான கதைகளுடனும் கமர்ஷியலாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. கேஜிஎப்-2 மூலமாக ஹிந்தி சினிமாவில் கூட தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அந்த வகையில் கன்னட இளம் நடிகர்கள் சிலர் பான் இந்தியா நடிகர்களாக மாறி வருகின்றனர். இந்தநிலையில் கன்னட சினிமாவில் பல வருடங்களாக முன்னணி நடிகராக இருக்கும் சிவராஜ்குமாரும் கன்னட எல்லையை தாண்டி பான் இந்தியா நடிகராக மாற விரும்புகிறார். அந்த வகையில் தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுடனும் இணைந்து நடிக்க உள்ளார்.
இந்தநிலையில் கன்னடத்தில் தயாராகி, பான் இந்தியா படமாக வெளியாகும் விதமாக உருவாகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிவராஜ்குமார். இந்த படத்தை கார்த்திக் அத்வைத் என்பவர் இயக்குகிறார். இவர் தமிழில் தற்போது விக்ரம் பிரபு, வாணிபோஜன் இணைந்து நடித்துள்ள ‛பாயும் ஒளி நீ எனக்கு' என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை அறிவித்துள்ள படத்தயாரிப்பு நிறுவனம் சிவராஜ்குமார், கார்த்திக் அத்வைத் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளது.